இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஜாகுவார்பகுதியில் நேற்றிரவு (2) பயிற்சியில் ஈடுபட்ட போர் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் வெடித்துச் சிதறி வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த போர் விமானத்தில் 2 விமானிகள் பயிற்சியை மேற்கொள்ளும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார் படுகாயங்களுடன் கிடந்த ஒரு விமானியை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். மாயமான மற்றொரு விமானியை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்நிலையில், மாயமான விமானி பலியாகி உள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக இந்திய விமானப்படை எக்ஸ் தள பக்கத்தில், ‘போர் பயிற்சி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே விபத்துக்கு காரணம். விமானிகளின் சாதுர்யத்தால் விமானத் தளம், மக்களுக்கு தீங்கு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்தில் பலியான விமானியின் குடும்பத்தினருடன் நாங்கள் நிற்கிறோம்’ என்று பதிவிடப்பட்டுள்ளது.