போலி கடவுச்சீட்டுஆவணங்கள்:இருவர் கைது

0
103
பன்னலவில் போலி விசாக்கள் மற்றும் கடவுச்சீட்டுகள் உள்ளிட்ட போலி ஆவணங்களை வழங்கும் பாரியளவிலான மோசடியில் ஈடுபட்டிருந்த நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பன்னல எலபடகம பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 23 வயதுடைய பன்னல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.எலபடகம பகுதியிலுள்ள வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், நீண்ட காலமாக போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர்களிடம் இருந்து 3 மடிக்கணினிகள், 8 பிரிண்டர்கள், இரண்டு கைத்தொலைபேசிகள், இரண்டு பென் டிரைவ்கள், இரண்டு சோதனை இயந்திரங்கள், ஒரு UPS, 24 கடவுச்சீட்டுகள் மற்றும் பல உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் முத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.