மகியங்கனை பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது!

0
27

மகியங்கனை பொலிஸ் பிரிவின் கோவில்யாய பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது உள்நாட்டுத்  துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மகியங்கனை , சொரபொரவில் பகுதியைச் சேர்ந்த  66 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.