தேசிய எரிபொருள் உரிமம் அல்லது QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் மக்களின் எரிபொருள் கொள்வனவு குறைவடைந்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரித்தமையே இந்த நிலைமைக்கு பிரதான காரணம் என பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
QR முறைமைக்கு ஏற்ப ஒரு காருக்கு வாரத்திற்கு 20 லீற்றர் பெற்றோல் கிடைக்கும். இதன்படி வாரம் 9,000 ரூபா வீதம் மாதம் 36,000 ரூபா தேவைப்படுவதனால் மக்களுக்கு அவ்வாறான செலவைச் செய்ய முடியாதுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.