மக்கள் என்ன கோருகின்றனர் என்ற நிலைப்பாட்டை பிரதமர் உள்ளிட்ட தரப்பினர் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பதே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விசேட உரையின் மூலம் தெரிந்துக்கொள்ளக் கூடியதாக இருந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமரின் விசேட உரையில், நாடு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடிக்கான தீர்வு அல்லது அதற்கு தேவையான மாற்றீடுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.
குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் அனுதாபங்களைக் கூட முன்வைக்கவில்லை. இதுவரை, நான்கு பேர் எரிபொருள் வரிசையில் நின்று மரணித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.