இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பலரைத் தற்கொலைக்கு தூண்டியுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அத்துடன் அதிக வாழ்க்கைச் செலவை எதிர்கொள்வதிலிருந்து குழந்தைகளுக்குக் குறைவாக உணவளிப்பது வரை இந்த நெருக்கடியானது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மீது அதிக பாதிப்பை ஏற்படுத்தியமையால் நாடு முழுவதிலும் உள்ள அனைத்துக் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இன்றைய இளைஞர்களும் தங்களின் செலவுகளைச் சமாளிக்க பொருத்தமான வேலைவாய்ப்பைத் தேடிவருகின்றனர்.
நாட்டை விட்டு வெளியேற பலர் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் உணவளிக்க நாட்டிலேயே தங்க விரும்புபவர்களும் உள்ளனர்.
இந்த நிலையில் பணம் சம்பாதிப்பதற்கு பாலியல் தொழிலிலும் சில குடும்பங்கள் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகமான பெண்கள் இந்த தொழிலில் ஈடுபடும் அதேவேளையில் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் வாழ்வாதாரத்திற்காக இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர் என்ற தகவலையும் ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.