மக்கள் எழுச்சிப் போராட்டங்களை முடக்குவதற்கு முயல வேண்டாம்!

0
115

மக்கள் எழுச்சிப் போராட்டங்களை முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்குமாயின், அதற்கு எதிராக எவ்வித நிபந்தனைகளுமின்றி எதிர்க் கட்சித் துணை நிற்கும் என்று, அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்துரைத்துள்ள அவர்,

மக்கள் எழுச்சி போராட்டங்களை முடக்க முடியாது என்பதை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கான காரணங்களை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுத்தால் மட்டுமே, மக்கள் எழுச்சிப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

இந்த அரசாங்கமே, மக்களை இவ்வாறானதொரு நிலைமைக்கு கொண்டுவந்தது.

மக்களை வரிசைகளில் நிறுத்தி, இருளுக்குள் தள்ளி, பொருட்களின் விலைகளை அதிகரித்து, மக்களின் பணத்தை சூறையாடி, அரச சொத்துக்களை சூறையாடிதன் காரணமாக அரசாங்கத்துக்கென ஒரு போராட்டத்தை மக்கள் இன்று ஆரம்பித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.