28.1 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மக்கள் எழுச்சிப் போராட்டம் 09 ஆவது நாளாக தொடர்கின்றது

ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எழுச்சிப் போராட்டம், இன்று 09 ஆவது நாளாக தொடர்கின்றது.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
போராட்டம் இடம்பெறும் பகுதியில் நேற்று விளக்குகளால் கோ கோம் கோட்டா என அலங்கரிக்கப்பட்டு வேண்டுதல் மேற்கொள்ளப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.
மேலும் இன்று உயிர்த்த ஞாயிறு தினம் கொண்டாடப்படும் நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கோரி காலி முகத்திடலில் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ளபோதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles