மட்டக்களப்பில் ஆதிவாசி குடும்பங்களுக்கு நிவாரணம்

0
292

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் பயணக் கட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஆதிவாசி குடும்பங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேரடியாக சென்று நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

வாகரை பிரதேசத்தின் ஆதிவாசி மக்களின் தலைவர் அம்பலவர்கே நல்லதம்பி வேலாயுதம் பயணத் தடை காரணமாக தமது மக்கள் உணவின்றி அல்லலுறுவதாக தெரிவித்து இலங்கைக்கான ஆதிவாசிகளின் தலைவர் ஊர்வக்கே வன்னிலத்தோவிடம் முறையிட்டிருந்தார்.

ஆதிவாசிகளின் தலைவர் ஊர்வக்கே வன்னிலத்தோவின் வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதாத் மாசிங்கவிடம் இவ் விடயம் தொடர்பான கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.

இதனையடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஏற்பாட்டில் பனிச்சங்கேணி, மாங்கேணி,கிருமிச்சை,குஞ்சன் கல் குளம்,கொக்குவில் போன்ற கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இவ் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

எனினும், இது போன்ற ஏனைய கிராமங்களில் தமது மக்கள் வறுமையின் கீழ் வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்கும் நிவாரணப் பொதி வழங்க ஏற்பாடு செய்து தருமாறும் ஆதிவாசி மக்களின் தலைவர் அம்பலவர்கே நல்லதம்பி வேலாயுதம் மேலும் கேட்டுக்கொண்டார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பி.கே.கெட்டியாராச்சி,ஏறாவூர்,வாழைச்சேனை,மற்றும் வாகரை பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டனர்.