மட்டக்களப்பில் ஆறு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

0
217

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுசுகாதார பரிசோதகர்களினால் இன்று மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் 6 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புபட்ட 54 நபர்களுக்கு ரபிட் அன்டிஜன் மற்றும் 5 நபர்களுக்கு பி சி ஆர் பரிசோதனை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பொதுசுகாதார பரிசோதகர்களினால் இன்று மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனயில் 6 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாவட்டத்தில் தொடர்ச்சியாக பி .சி .ஆர் , மற்றும் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது