மட்டக்களப்பில் இரத்ததான நிகழ்வு

0
315

இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் இளைஞர் அமைப்புக்களுடன் எகெட் கரித்தாஸ் பல் சமய இளைஞர் கழக ஒன்றிணைந்த ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

ஐந்தாவது இளைஞர் பாராளுமன்றத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயல் திட்டத்தின் ஊடாக மண்முனை வடக்கு பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குருதி கொடையாளர்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து இரத்ததான நிகழ்வினை முன்னெடுத்துள்ளது.

களுவாஞ்சிகுடி, காத்தான்குடி, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளுக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து குருதி வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன