மட்டக்களப்பில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் விசேட நடமாடும் சேவை

0
83

‘உறுமய’ தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் குடியிருக்கும் மக்களுக்கு உறுதி வழங்குவதற்கான நடமாடும் சேவை, மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட பணிப்பாளர் என்.விமல்ராஜூன் எற்ப்பாட்டில் புதிய மாவட்ட செயலகத்தில் நடமாடும் சேவை நடைபெற்றது.
சிறிய தொகை பணத்தை செலுத்தி நிலம் ஒன்றினை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக் கொள்வதற்காக, கைவிரல் அடையாளம், உறுதியை பிரதி செய்தல், ஆவணம் பூர்த்தி செய்தல் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிஹால், காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.