29 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பில் கொரோனா பரிசோதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெட்டுக்காடு பொதுச்சுகாதார பிரிவில் 29 பேருக்க மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நகர் வெட்டுக்காடு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் எழுமாறாக ரபிட் அன்டிஜன் பரிசோதனை இன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதனின் வழிகாட்டலின் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நுண் உயிரியல் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் வைதேகி ரஜீவன் பிரான்சிஸ் மற்றும் வைத்தியசாலை ஆய்வு கூட தொழில் நுட்பவியலாளர்களுடன் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இந்த பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பி.சி.ஆர் மற்றும் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles