மட்டக்களப்பு மாவட்டத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் பொதுமக்கள் மிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகவும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையளவில் நிறைவு பெறும் என எதிர்பார்ப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அரசாங்க அதிபர் அசாதாரண சூழ்நிலை காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்த 87, 270 வறிய குடும்பங்களுக்கு 5000 ஆயிரம் ரூபா கொடுப்பனவாக 43 கோடியே 63 ,இலட்சத்தி 16 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 42 கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.