29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பி.சி.ஆர் ,ரபிட் அன்டிஜன் பரிசோதனை

மட்டக்களப்பு இருதயபுரத்தில் 63 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் தலைமையில் மாமாங்கம் மற்றும் இருதயபுரம் பொது சுகாதார பரிசோதகர்களினால் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் மற்றும் தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 50 நபர்களுக்கும், 13 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பி.சி.ஆர் மற்றும் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles