மட்டக்களப்பு பொலிசாரினால் இப்தார் நிகழ்வு இன்று சிறப்பாக நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான தலைமையில், கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகணவின் வழிகாட்டுதலின் கீழ் இப்த்தார் நிகழ்வு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வளாகத்தில் இன்று மாலை நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லியனகே
கலந்து சிறப்பித்தனர்.
மூவின மத தலைவர்களின் ஆசியுரையுடன் இப்த்தார் நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றன.
மாவட்டத்தில் இன மத நல்லுறவை மேம்படுத்தும் செயற்பாட்டில் ஒன்றாகவே, இப்தார் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இன மத பேதமின்றி அனைவரும் எமது நாட்டை நேசித்து, பாதுகாத்து கட்டியெழுப்ப
வேண்டும் என வலியுறுத்தினார்.
நிகழ்வில் 231 இராணுவ படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சந்திம குமாரசிங்க, பொலிஸ் உயர் அதிகாரிகள், விமானப்படை உயர் அதிகாரிகள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், முப்படை வீரர்கள், வர்த்தக பிரமுகர்கள், சிவில் சமூக பிரமுகர்கள் என பலர் கலந்து
கொண்டனர்.