மட்டக்களப்பில் ரபிட் அன்டிஜன் பரிசோதனை: இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

0
628

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச்சுகாதார பரிசோதகர்களால் இன்று மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புபட்ட 27 பேருக்கு ரபிட் அன்டிஜன் மற்றும் 16 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பொதுசுகாதார பரிசோதகர்களால் இன்று மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதனின் வழிகாட்டலின் கீழ் 27 பேருக்க மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனயில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாவட்டத்தில் தொடர்ச்சியாக பி.சி.ஆர் மற்றும் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.