மட்டக்களப்பில் வீதியோர வியாபாரங்களுக்கு தடை:க.கருணாகரன்

0
207

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதியோர விற்பனைகளுக்கு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளதாக அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்

பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் சுகாதாரத் துறையினர் தவிர்ந்த அனைத்து திணைக்களங்களின் ஊழியர்கள் கடமைக்குச் செல்லும்போது தமது அலுவலக அடையாள அட்டைக்கு மேலதிகமாக திணைக்களத் தலைவரின் அனுமதிக் கடிதத்தினையும் வைத்திருக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாதவிடத்து பாதுகாப்புத் தரப்பினரால் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.