மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் 22 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சுகாதாரவைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட் பொதுசுகாதார பிரிவுகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்றாளர்களுடன் நேரடியாக தொடர்பு பட்டவர்கள் .நோய் தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான பி.சி. ஆர் மற்றும் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் வழிகாட்டலின் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நுண் உயிரியல் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் வைதேகி ரஜீவன் பிரான்சிஸ் வைத்தியசாலை ஆய்வு கூட தொழில் நுட்பவியலாளர்களுடன் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து அமிர்தகழி பொது சுகாதார பரிவில் 144 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் , 97 நபர்களுக்கு ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளும் இன்று முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது 97 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் 22 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்திய அதிகாரி வைத்தியர் கிரிசுதன் தெரிவித்துள்ளார்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பி.சி. ஆர் மற்றும் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.