மட்டக்களப்பு ஏறாவூர் ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்தின் கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய
தினம் இடம்பெற்றது.
வித்தியாலயத்தின் பௌதீக வளம் மற்றும் வசதிகள் குறைபாட்டினை கருத்திற்கொண்டு, குவைத் நாட்டின் அப்துல்லா அந்நூரி அமைப்பின், ஆறு மில்லியன் ரூபா நிதியுதவியினூடாக,
அடிப்படை வசதிகளை உள்ளடக்கியதாக கலாசார மண்டபம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
பாடசாலையின் அதிபர் ஏ.எஸ். லாபிர் தலைமையில் இடம்பெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வில், மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்எம்எம்.அமீர் பிரதம
அதிதியாகக் கலந்துகொண்டார்.
நிகழ்வில் அப்துல்லா அந்நூரி அமைப்பின் அபிவிருத்திப்பிரிவிற்கான ஐ.எஸ்.ஆர்.சி திட்ட இணைப்பாளர் ஜுனைட் நழீமி, பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.ஜே.எப். றிப்கா
மற்றும் கல்வித்துறை அதிகாரிகள,; பாடசாலை மாணவர்கள் என பலரும் பங்கேற்றனர்.