மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்கள் ஆர்ப்பாட்டம்

0
178

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்கள் இன்று நண்பகல் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அவ்வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதி உத்தியோகஸ்த்தர்கள்,மற்றும் ஏனைய ஊழியர்கள் அடங்கலாக பலர் கலந்து கொண்டதுடன் பதாகைகளை ஏந்தியவாறு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் முன்னால் பேரணியாக வந்து கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருந்துகளைத் தடையின்றி வழங்கு,ஆரோக்கியத்தை அழிக்காதே, எரிபொருளை தடையின்றி வழங்கு, பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்,விலை அதிகரிப்பை உடனடியாகக் நிறுத்து,நாட்டை படுகுழிக்குள் தள்ளாதே,வன்முறையைத் தூண்டாதே,உள்ளிட்;ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.