மட்டக்களப்பு காத்தான்குடியில் கவிதாயினி ஹஸீபா தௌபீக் எழுதிய ‘அவளதிகாரம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில், பாவலர் சாந்திமுகைதீன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
நூலின் நயவுரையை காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் செயலாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.எஸ்.அமீர் அலி
நிகழ்த்தினார்.