29 C
Colombo
Tuesday, October 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு கிரான் பகுதியில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழந்தார்

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர்பிரிவிற்குட்பட்ட பொண்டுகள்சேனை பிரதான வீதியில் , நேற்று அதிகாலை காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிரான் புலிப்பாய்ந்தகல் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய தம்பிபிள்ளை அம்பிகைராசா என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவாரவர்.

உயிரிழந்த நபர் புலிபாய்ந்தகல் பகுதியிலுள்ள தனது வீட்டில் இருந்து பூலாக்காடு பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு நேற்று திங்கள் கிழமை அதிகாலை துவிச்சக்கர வண்டிலில் சென்ற வேளையில் இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. கோரளைப்பற்று தெற்கு கிரான் பகுதிக்குரிய திடீர் மரண விசாரணை அதிகாரி கே.பவளகேசன் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார் வைத்தி சாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் இம் மாதம் இருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles