மட்டக்களப்பு தாண்டியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர் பாராளுமன்ற அமர்வு

0
70

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள தாண்டியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர் பாராளுமன்ற அமர்வு இன்று நடை பெற்றது.
பாட பொறுப்பாசிரியர் தயரதனி சிவராஜ் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயக் கல்வி அலுவலக பாடசாலை இணைப்பாளர் என்.நவநீதன், பாடசாலை அதிபர் ரி.பத்மநாதன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள்
என பலர் கலந்து கொண்டனர்.

மாணவர் பாராளுமன்ற அமர்வில் பிரதமர், சபை முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் சத்தியப் பிரமாண நிகழ்வும் நடைபெற்றது. மாணவர்களுக்கு இலங்கை பாராளுமன்ற செயற்பாடுகளையும் அதன் நிருவாக கட்டமைப்பு போன்றவற்ற செயற்பாடுகளின் மூலம் விளங்கிக் கொள்ளும் வகையில் மாணவர் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.