மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச
செயலகப்பிரிவில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு
வாழ்வாதார உதவி வழங்கல்

0
207

பாம் பவுண்டேசனால் நடைமுறைப்படுத்தப்படும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவில் பெண்களுக்கு வாழ்வாதாரத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு அரசடித்தீவு பாலர் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

சுயதொழில்களில் ஈடுபடும் பெண்கள் அவர்களுடைய தொழில்களை மேம்படுத்துவதற்காக இவ் உதவிகள் வழங்கப்பட்டதுடன் ஒவ்வொரு பெண்களுக்கும் தலா 25000 ரூபா பெறுமதியான அவர்களுக்குத் தேவையான உபகரணங்கள், பொருள்கள் வழங்கப்பட்டன.

நேதர்லாந்து பாம் பவுண்டேசனின் நிதிப் பங்களிப்பில் இலங்கைக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் சுனில் தொம்பேபொலவின் தீர்மானத்திற்கமைவாக நடைமுறைப்படுத்தப்படும் நான்காவது கட்டம் இதுவென்பதுடன்.
ஏற்கனவே,மகிழடித்தீவு, முனைக்காடு, கொக்கட்டிச்சோலை ஆகிய பிரதேசங்களில்மூன்று கட்டங்களில் 147 பெண்களுக்கு வாழ்வாதாரத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாம் பவுண்டேசனின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான திட்ட உத்தியோகத்தர் பிரியதர்சினி சந்;திரலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் கிராமசேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பாம் பவுண்டேசனின் வெளிக்கள உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
இவ்வாறான உதவிகளைப் பெற்றுக்கொள்பவர்கள் மிகவும் நன்றியுடையவர்களாக இருத்தல் வேண்டும். அதே நேரத்தில் உங்களது தொழிலை தொடர்ச்சியாகவும் சிறப்பாகவும் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இவ்வாறான உதவிகள் பெறுமதியானவையாக அமையுமென தெரிவித்தார்.