மட்டக்களப்பு மயிலம்பாவெளி வெண்புறா விளையாட்டு கழகம் வருடாந்தம் நடத்தும் லீக் முறையிலான பிரிமியர் கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான ஆரம்ப நிகழ்வு, இன்று மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
மயிலம்பாவெளி வெண்புறா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், கழகத்தின் தலைவர் துச்சாந்தன் தலைமையில்
இடம்பெறுகின்ற லீக் முறையிலான பிரிமியர் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சீசன் 3 ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மயிலம்பாவெளி வெண்புறா விளையாட்டு கழகம், தமிழ் சித்திரை புத்தாண்டு வருடத்தை முன்னிட்டு நடத்தவுள்ள கலாச்சார விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாக நிகழ்வு, இடம்பெறுகின்றது
கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்தும் வகையிலும், கிராம இளைஞர்களின் சினேகபூர்வ ஒன்றிணைப்பை கட்டி எழுப்பும் நோக்குடனும், போட்டி இடம்பெற்றது.
மயிலம்பாவெளி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற ஆலய வழிபாட்டினை தொடர்ந்து, வீரர்கள் வெற்றி கிண்ணம் சகிதம் ஊர்வலமாக மைதானத்தை வந்தடைந்தனர்
இதனைத் தொடர்ந்து மயிலம்பாவெளி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு, சிவஸ்ரீ விக்னேஸ்வர குருக்கள் தலைமையில், விளையாட்டு வீரர்களினால் மைதான வளாகத்தில் நிழல் தரும் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
தொடர்ந்து மைதானத்தில் தேசியக்கொடி மற்றும் விளையாட்டு கழகங்களின் கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைத்தலுடன், லீக் முறையிலான பிரிமியர் சீசன் 3 கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான நிகழ்வு ஆரம்பமானது
ஐந்து விளையாட்டு கழகங்கள் கலந்து கொள்ளும் லீக் முறையிலான பிரிமியர் சீசன் 3 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், அணிக்கு 11 பேர் கொண்ட பத்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட, கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், வெற்றி பெறுகின்ற அணிகளுக்கான கௌரவிப்பும் பரிசளிப்பு நிகழ்வும், மயிலம்பாவெளி வெண்புறா விளையாட்டு கழகம் தமிழ் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடத்தவுள்ள கலாச்சார விளையாட்டு நிகழ்வில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது