ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் மூன்றாவது நாளான இன்றைய தினம், மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்கள் ஆர்வமுடன் வாக்களிப்பில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.
மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில், மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியானின் மேற்பார்வையில், மட்டக்களப்பு மாநகர சபையின் உத்தியோகஸ்தர்களின் வாக்கு பதிவுகள் இடம்பெற்றது.