28.5 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.எல்லை வீதி ஸ்ரீ சிந்தாமணிப்
பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்

மட்டக்களப்பு எல்லை வீதி ஸ்ரீ சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட மட்டக்களப்பு எல்லை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் இன்று இடம்பெற்ற கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகி எதிர் வரும் 06 ஆம் திகதி இடம்பெற்றவுள்ள தீர்த்தோற்சவதுடன் ஆலய திருவிழா நிறைவுபெறவுள்ளது

ஆலய உற்சவ குரு ஈசான சிவாசாரியார் குரு திலகம் சிவஸ்ரீ சிவானந்தம் குருக்கள் தலைமையில் ஆலய பிரதம சி .கு சிவநேச.லவகுமார் சர்மா குருக்கள் இணைந்து நடத்தப்பட்ட விசேட யாக பூஜை தொடர்ந்து ,பிரதான கும்பம் மற்றும் பரிபால மூர்த்திகளின் கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூசையுடன் சுவாமி உள்வீதி உலா வருதல் இடம்பெற்று கொடியேற்ற நிகழ்வு பூசையுடன் நிறைவு பெற்றது.
ஆலய கொடியேற்ற உற்சவத்தில் பெருமளவான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles