மட்டு.ஐயன்கேணியில் உணவு
உற்பத்திக்காக ஊக்கமளிக்கும் நிகழ்வு

0
159

ஏற்படப் போகும் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ள வீட்டுத் தோட்ட விவசாயிகளுக்கு அவசர அவசிய உணவு உற்பத்திக்காக ஊக்கமளிக்கும் நிகழ்வு ஏறாவூர் நகர பிரதேச விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதாஷிரீன் தலைமையில் ஐயன்கேணியில் இன்று இடம்பெற்றது.

கிராம வீட்டுத் தோட்ட விவசாயிகளுக்கு விவசாயத் திணைக்களத்தினால் அரை மானிய அடிப்படையில் சிறந்த மரக்கறிப் பயிர் விதைகள் விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. நிஹாறா சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டின் இணைப்பாளர் எம்.ஐ. தஸ்லிம் உட்பட விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் கவிதாரணி பிறேம்ரூபன் உட்பட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய மட்டக்களப்பு விவசாய உதவிப் பணிப்பாளர் எஸ். சித்திரவேல் உணவுப் பஞ்சத்தை நாம் எதிர்கொள்ளத் தயாராகின்ற அதேவேளை போஷாக்கைப் பற்றியும் அக்கறை கொள்ள வேண்டும். பட்டினிக் காலத்iதில் இளம் பராயத்தினரைப் பாதுகாப்பதற்கு போஷாக்கு முக்கியம். ஒவ்வொருத்தரும் தங்களது வீடுகளிலுள்ள வீட்டுத் தோட்டங்களிலே போஷாக்கான உணவு உற்பத்திகளை மேற்கொள்ள முடியும்’ என்றார்.