மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்றில் இருத்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு இராணுவத்துடன் இணைத்து கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் கிருமி நாசினி விசுறும் நடவடிக்கை இன்று நடைபெற்றது.
ஓட்டமாவடி பிரதேசத்தில் காணப்படும் பொதுசந்தைக்கட்டிடம், பிரதான கடை தெருக்கள், வங்கிகள் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது மக்கள் நடமாடும் அடையாளப்படுத்தப்பட்ட பொது இடங்களில் கிருமி நாசினி விசுறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.