மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்லடி கடற்கரை பகுதியில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த ஆலயமான மட்டக்களப்பு கல்லடி கடற்கரை அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.ஆலய பங்குத்தந்தை அருட்பணி லோரன்ஸ் அடிகளார் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வினை தொடர்ந்து விசேட திருப்பலி அருட்பணி றோசான் அடிகளாரினால் ஒப்புகொடுக்கப்பட்டது.
நான்கு நாட்கள் திருவிழாவாக சிறப்பிக்கப்படவுள்ள கல்லடி அன்னை வேளாங்கண்ணி அன்னையின் திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை திருச்செபமாலையும் தொடர்ந்து திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதுடன் எதிர்வரும் சனிக்கிழமை மாலை அன்னையின் திருவுருவ பவனியும் தொடர்ந்து விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
திருவிழா திருப்பலி எதிர்வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான கல்லடி கடற்கரை அன்னை வேளாங்கண்ணி ஆலய கொடியேற்ற திருவிழா திருப்பலியில் பங்கு மக்கள் கலந்து சிறப்பித்தனர்