மட்டக்களப்பு காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள அல்அமீன் தேசிய பாடசாலையில் ஹிஜ்ரி 1444 வது இஸ்லாமிய புது வருட த்தை வரவேற்கும் முஹர்ரம் விழா இன்று பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது
நிகழ்வில் தரம் பத்து மாணவர்களுக்கான இரண்டாம் மொழி சிங்களம் வினா விடை தொகுப்பு எனும் நூல் ஒன்றும் மஞ்சேரி எனும் சஞ்சிகையும் வெளியீட்டு வைக்கப்பட்டன.
ரைஸ் சிறீலங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.பி.அக்ரம் நழீமியின் சிறப்பு உரை இடம் பெற்றதுடன் மாணவிகளின் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.பாடசாலை அதிபர் நயிமா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எஸ்.உமர்மௌலானா காத்தான்குடி தோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன். பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஹக்கீம் உட்பட கல்வி அதிகாரிகள். ஆசிரியர்கள் மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.