கொரோனா வைரஸ் பரம்பல் நிலையினை கட்டுப்படுத்துவதற்கு மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் நகர சபை ஊழியர்களும் இராணுவத்தினரும் இணைந்து கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கையில் இன்று முன்னெடுத்திருத்தனர்.
மூன்று நாட்கள் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டு நாளைய தினம் பயணத்தடை தளர்த்தப்படவுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வருகை தரும் மக்களை தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.