மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் மீனவர்களின் மீன்பிடி தொழில் தொடர்பான தகவல்களை திரட்டும் நடவடிக்கை இன்று இடம் பெற்றது.காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதரின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் கூகுள் படிவத்தின் ஊடாக தகவல் திரட்டும் நடவடிக்கை இடம் பெற்றது.
முதல் கட்டமாக இன்று காத்தான்குடி கடலில் மீன்படி தொழிலில் ஈடுபட்டு வரும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களின் தகவல்கள் திரட்டப்பட்டன.
திரட்டும் நடவடிக்கையில் குறித்த பகுதியின் கிராம உத்தியோகத்தர்கள், கரையோரம் பேணல் திணைக்கள உத்தியோகத்தர், சமுர்;த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், காத்தான்குடி நகர சபை ஊழியர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், காத்தான்குடி பொலிசார் ஈடுபட்டனர்.இதன் போது மீனவர்களின் விபரங்கள், அவர்களின் மீன்பிடி வாடிகள் உட்பட பல்வேறு தகவல்கள் திரடப்பட்டதுடன் மீனவர்களின் மீன்பிடி வாடிகளுக்கு இலக்கங்களும் வழங்கப்பட்டன.