29 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.கோட்டைக்கல்லாறு பொது நூலகத்தில்
நூல்கள் அன்பளிப்பு நிகழ்வு

மட்டக்களப்பு மண்முனைதென் எருவில் பற்று பிரதேச சபைக் குட்பட்ட கோட்டைக்கல்லாறு பொது நூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் தேசியவாசிப்பு மாதச் செயற்திட்டத்தை முன்னிட்டு வீட்டுதோட்ட உற்பத்தியை மேம்படுத்தும் திட்டம் மற்றும் நூல்கள் அன்பளிப்புபெறும் நிகழ்வும் இன்று வாசகர் வட்டத் தலைவர் அ.புருஸோத்மன் தலைமையில் நடைபெற்றது.
கோட்டைக்கல்லாறு பொது நூலக வாசகர் வட்டமானது பிரதேசத்தில் பல்வேறு பொது நலதிட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. இதற்கமைய மக்கள் மத்தியில் வீட்டுத்தோட்ட உற்பத்தியை மே ம்படுத்தும் வகையில் விழிப்புணரவு கருத்தரங்குகள்,செயல்முறை பயிற்சிகளை நடத்தி வருவதுடன் நூலகத்திற்கான நூல்களை சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

இங்கு வீட்டுத்தோட்ட உற்பத்தியளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்ட்டதுடன்,லண்டன் வைத்தியகலாநிதி நவரெத்தினம்,லண்டன் சுதாகரன் ஆகியோரால் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட நூல்கள் அன்பளிப்புசெய்யப்பட்டன.
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கோட்டைக்கல்லாறு பொது நூலகவாசகர் வட்டத்தினால் மாணவர்கள் மத்தியில் பல்வேறு போட்டி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனைதென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோகநாதன் கலந்து கொண்டதுடன் பிரதி தவிசாளர் ரஞ்சினிகனகரெத்தினம்,அதிபர் க.செல்வராசா,லண்டன் வைத்திய கலாநிதி நவரெத்தினம்,லண்டன் சுதாகரன்,சனசமுக உத்தியோகத்தர் குகனேசன், நூலகப்பொறுப்பாளர் வினோதா, நூலக உதவியாளர் தனஞ்சயன்,உபதலைவர் சௌந்தரராசா ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles