மட்டு.செங்கலடி புனித நிக்கோலாஸ்
ஆலயத்தின் வருடாந்த திருவிழா

0
223

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பழைமை வாய்ந்த கத்தோலிக்க ஆலயமான மட்டக்களப்பு செங்கலடி புனித நிக்கோலாஸ் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று காலை அமலமரி தியாகிகள் சபை அருட்பணி யோகராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டுத்திருப்பலியுடன் வருடாந்த திருவிழா கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவுபெற்றது.
ஆலய திருவிழா கொடியேற்ற நிகழ்வு கடந்த 12ஆம் திகதி மாலை பங்குதந்தை குயின்டஸ் தலைமையில் பங்குமக்கள் இணைந்து ஏற்றப்பட்ட திருவிழா கொடியேற்ற நிகழ்வினை தொடர்ந்து ஒன்பது தினங்கள் திருவிழா நவநாள் திருப்பலி சிறப்பிக்கப்பட்டு நேற்று மாலை நற்கருணை ஆராதனையும் தொடர்ந்து புனிதரின் திருவுருவபவனியும் இடம்பெற்றது .

ஆலயவருடாந் திருவிழா கூட்டுத்திருப்பலி இன்று காலை அமலமரி தியாகிகள் சபை அருட்பணி யோகராஜா அடிகளாரின் தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து ஒப்புக்கொடுக்கப்பட்ட
கூட்டுத்திருப்பலியை தொடர்ந்து புனிதரின் திருச்சுருவ பவனியும் தொடர்ந்து ஆலயமுன்றலில் இடம்பெற்ற புனிதரின் விசேட திருச்சுருவ ஆசீருடன் ஆலய திருவிழாகொடி யிறக்கப்பட்டு திருவிழா நிறைவுபெற்றது திருத்த திருவிழா திருப்பலியில் மட்டக்களப்பு மறை மாவட்ட அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் ,மறைமாவட்ட பங்குமக்கள் என பலர்கலந்து சிறப்பித்தனர்

ஆலய திருவிழா நவநாள் காலங்களில் திருப்பலியின் போது பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கும் பங்கு குடும்பங்களுக்குமாக இடம்பெற்ற விவிலிய வினாவினாடி போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு,குடும்பங்களுக்கும் பெறுமதியான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் ,ஆலய திருவிழாவின் விசேட அம்சமாக பங்குமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது