மட்டு. ஜெயந்திபுர பௌத்த மத்திய நிலைய விகரையில் வெசாக் விசேட பிரித் நிகழ்வு

0
507

பௌத்த மக்களின் மிக முக்கியத்துவமிக்க தினமாக வெசாக் முழுமதி தினத்தை முன்னிட்டு அமைதியான முறையில் வழிபாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கொரனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் இன்றைய தினம் கொரனா தொற்றிலிருந்து பொதுமக்களையும் நாட்டினையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் உள்ள விகாரைகளில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஜெயந்திபுர பௌத்த மத்திய நிலைய விகரையில் விசேட வெசாக் தினத்தை முன்னிட்டு பிரித் நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனாவின் தாக்கம் அதிகரித்துவருவதன் காரணமாக மக்கள் அனுமதிக்கப்படாமல் ஜெயந்திபுரம் பௌத்த மத்திய நிலைய விகரையின் விகாராதிபதி சங்கைக்குரிய தம்மபால தேரோவின் தலைமையில் வெசாக் தின உற்சவம் பிரித்து நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெட்டியாராட்சி உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது நாட்டிலிருந்து கொரனா தொற்று அழியவும் அதில் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.