28.4 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.நாவற்காடு கலைமகள் கனிஸ்ட
பாடசாலை மாணவனுக்கு நிதியுதவி

மட்டக்களப்பு மாவட்டம் நாவற்காடு கலைமகள் கனிஸ்ட பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு தனது கால்களில் ஏற்பட்ட சுகயினத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக நிதியுதவி வழஙகப்பட்டது.

குறித்த மாணவர் இந்தியா சென்று சிகிச்சை பெறுவதற்காக தமிழ் மக்கள் இளைஞர் அணியினர் ஒரு இலட்சம் ரூபா நிதி உதவியினை இன்று வழங்கி வைத்தனர்.

அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் நிரோஜன் தலைமையில் நாவற்காடு நாமகள் வித்தியாலயத்துடன் இணைந்த கனிஸ்ட பிரிவு பாடசாலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்,அமைப்பின் திருவாக உறுப்பினர்கள், மாணவனின் தாயார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த சில மாதங்களாக குறித்த மாணவனுக்கு காலில் ஏற்பட்ட திடீர் சுகயீனத்தால் இருகால்களும் செயழிலந்து பேயுள்ளது.

இந்நிலையில் குறித்த மாணவர் இந்தியாவில் சிகிச்சை பெறும் வகையில் இலங்கையிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் உள்ள தமிழ் மக்கள் இளைஞர் அணியினரால் இந் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles