27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.புளியடிக்குடா புனித செபஸ்தியார்
ஆலயத்தின் வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் 104 வருடங்கள் பழைமை வாய்ந்த கத்தோலிக்க ஆலயமான மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது

மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா கூட்டுத் திருப்பலி அருட்தந்தை எக்ஸ் .ஐ .ரஜீவன் அடிகளார் தலைமையில் ஆலய பங்குதந்தை அனிஸ்டன் மொறாயஸ் அடிகளாருடன் அருட்தந்தையர்கள் இணைந்து இன்று ஒப்புகொடுத்தனர்.

ஆலய வருடாந்த திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி கடந்த 9 தினங்கள் தினமும் மாலை திருசெபமாலை திருப்பலி இடம்பெற்று நேற்றுமாலை புனிதரின் திருச்சுருவ பவனியும் தொடர்ந்து விசேட திவ்வியநற்கருணை வழிபாடு இடம்பெற்றது

இன்று இடம்பெற்ற திருவிழா கூட்டுத்திருப்பலியை தொடர்ந்து பங்குதந்தை அனிஸ்டன் மொறாயஸ் அடிகளார் முன்னெடுக்கும் ஆலய ஆன்மீக பணிக்களுக்காக பங்குமக்களினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டத்துடன் தொடர்ந்து ஆலய முன்றலில் இடம்பெற்ற புனிதரின் திருச்சுருவ ஆசீருடன் ஆலய திருவிழா கொடியிறக்கப்பட்டு திருவிழா இனிதாக நிறைவு பெற்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles