மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த திருவிழாவினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் மற்றும் அருட்தந்தையர்கள் பங்கு மக்களால் விசேட வரவேற்பளிக்கப்பட்டு திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பழைமை வாய்ந்த கத்தோலிக்க திருத்தலமான மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த திருவிழா ,ன்று காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற கூட்டுத்திருப்பலியுடன் வருடாந்த திருவிழா கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவுபெற்றது.
ஆலய திருவிழா கொடியேற்ற நிகழ்வு கடந்த 6 ஆம் திகதி மாலை பங்குதந்தை ஜோர்ஜ் ஜீவராஜ் தலைமையில் பங்குமக்கள் ,ணைந்து ஏற்றப்பட்ட திருவிழா கொடியேற்ற நிகழ்வினை தொடர்ந்து ஒன்பது தினங்கள் திருவிழா நவ நாள் திருப்பலி சிறப்பிக்கப்பட்டு நேற்று மாலை நற்கருணை ஆராதனையும் தொடர்ந்து அன்னையின் திருவுருவ பவனியும் இடம்பெற்றது. திருப்பலியை தொடர்ந்து ஆலய முன்றலில் ,டம்பெற்ற அன்னையின் விசேட திருச்சுருவ ஆசீருடன் ஆலய திருவிழா கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவுபெற்றது.
திருத்தல திருவிழா திருப்பலியில் மட்டக்களப்பு மறை மாவட்ட அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் ,மறை மாவட்ட பங்கு மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்