மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமான முறையில் மண் ஏற்றிச் சென்ற உழவு இயற்திரத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீவு பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஈ.எம்.கெமுனு வசத்த தலைமையிலான பொலிஸார் கொத்தியாபுலை பகுதியில் இன்று மேற்கொண்ட நடவடிக்கையின் போது இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட நபரையும் மண் நிரப்பப்பட்ட உழவு இயந்திரத்தையும் நீதி மன்றின் ஆஜர் படுத்த உள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.