மட்டு.வாழைச்சேனை வைத்தியசாலையில்
நோயாளிகளை சமூக மயப்படுத்தல்

0
163

மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை உளநல புனர்வாழ்வு சேவை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் மனநிலையினை மாற்றி சமூக மயப்படுத்தல் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் வீட்டுத்தோட்ட பயிர்செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வன்னிகோப் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் நிதி அனுசரணையின் தீரணியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்துடன் மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பிரிவு இணைந்து இச் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

நோயாளிகளை சமூக மயப்படுத்தல் செயல்பாட்டின் கீழ் நஞ்சற்ற விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வைத்தியசாலை வளாகத்தில் சேதன பயிர்செய்கை , பயிர்வளப்பு ,சூழல் மேம்பாடு போன்ற வீட்டுத்தோட்ட பயிர்செய்கையினையும் , பழமரக்கன்றுகள் நடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் உளநல வைத்திய ஆலோசனை மற்றும் புனர்வாழ்வு சேவையின் வைத்திய அதிகாரி ஜூடி ஜெயக்குமார் வழிகாட்டலின் முன்னெடுக்கப்படுகின்ற வருகின்ற செயல்திட்டத்தினையும் , வைத்தியசாலை உளநல புனர்வாழ்வு சேவை சிகிச்சை பிரிவினையும் பார்வையிட்ட கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கொஸ்தா, மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் எ . நவேஸ்வரன் உட்பட பாடசாலை அதிபர்கள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பிரிவு உத்தியோகத்தர்கள் நோயாளிகளுடன் இணைந்து வைத்தியசாலை வளாகத்தில் பயிரக்கன்றுகளையும் ,பலமரக்கன்றுகளையும் நடுகை செய்தனர்.