மணற்சேனை கிராமத்தில் மனிதப் படுகொலையின் 37வது நினைவு நாள்

0
155

யாழ்ப்பாணம் மூதூர் பெரியவெளி, மணற்சேனை கிராமத்தில் கடந்த 1986ஆம் ஆண்டு ஆடி மாதம் பதினாறாம் திகதி இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 37வது நினைவு நாள் நேற்று இடம்பெற்றது.

இதன்போது மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடு இடம்பெற்றது.

உயிரிழந்த பொது மக்களுக்கான ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டு பொதுச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் நினைவுரையினையும் நிகழ்த்தியிருந்தார்.

நிகழ்வில் உயிர்நீத்தவர்களின் உறவுகள், பொதுமக்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுக்களின் உறுப்பினர்கள், பல்வேறு சங்கங்களின் அங்கத்தவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.