மணல் ஏற்றிவந்த டிப்பர் தடம்புரண்டு விபத்து!

0
262

மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனம் இன்று காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
விபத்தில் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா குறுக்கு வீதியில் விபத்து சம்பவித்துள்ளது.
மகியங்கனையிலிருந்து ஹட்டன் பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற டிப்பரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக விபத்து இடம்பெற்றிருக்கலாம் என நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.