இலங்கையிலிருந்து இந்தியாவிற்குத் தப்பிச் சென்றிருந்த மண்தலகல சுமித் பிரியந்த நேற்று (12) இரவு கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கப்பம் பெறுதல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கையெறி குண்டு வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற குற்றவாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.