மனித உரிமை பேரவையின் பொறுப்புக்கூறல் தொடர்பான திட்டத்தை நிராகரித்தது, இலங்கை அரசாங்கம்

0
123

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பொறுப்புக்கூறல் தொடர்பான திட்டத்தை, இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி சுபாசினி அருணதிலக தெரிவித்துள்ளார்.

இன்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 54 ஆவது அமர்வின் ஆரம்பத்தில், இலங்கையின் நிலைப்பாட்டை முன்னிறுத்தி உரையாற்றுகையில், திட்டத்தை நிராகரித்தார்.

இலங்கை அரசாங்கம், பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு வழிவகுத்த 46ஃ1 -51ஃ1 என்ற இரண்டு தீர்மானங்களையும், முற்றுமுழுதாக நிராகரித்துள்ளது என்பதை, நான் ஆரம்பத்திலேயே தெரிவிக்க விரும்புகின்றேன்.

எழுத்து மூல அறிக்கைகளையும் முடிவுகளையும் பரிந்துரைகளையும், நாங்கள் நிராகரிக்கின்றோம்.

இந்த தீர்மானங்களில் காணப்படும் உள்ளடக்கங்களை ஏற்றுக்கொள்ளாததால், பல நாடுகள், இந்த தீர்மானத்தை எதிர்த்தன.

அல்லது அதில் வாக்களிப்பதை தவிர்த்தன என்பதை, நாங்கள் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

குறிப்பாக, ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை, அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளமை, முன்னொருபோதும் இடம்பெறாத விடயம்.

இது, மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள், பேரவைக்கு வழங்கிய ஆணைக்கு அப்பால் செல்கின்றது என்பதை, இலங்கை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றது.

இந்த தீர்மானங்கள், உள்விவகாரங்களில் தலையிடுபவை. சமூகங்களை துருவமயப்படுத்துபவவை.

இந்த தீர்மானங்களை, மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்ட காரணங்களுக்காகவும், தங்களின் உள்நாட்டு அரசியலுக்காகவும், ஒருசில நாடுகள் பின்பற்றுகின்றன.

இந்த தீர்மானத்தின் நிதிசார்ந்த தாக்கங்கள் குறித்து, பல நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இது பேரவையினதும், உறுப்பு நாடுகளினதும் வளங்கள் மீது, பயனற்ற விதத்தில் செலவுகளை உருவாக்க கூடியது என்பதை, இலங்கை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது.

இதன் காரணமாக, இலங்கை இதற்கு ஒத்துழைப்பு வழங்காது.

எனினும் பல் தரப்பு கட்டமைப்பில், ஆக்கபூர்வமாக பங்கெடுக்கின்ற நாடு என்ற அடிப்படையிலும், சர்வதேச சமூகத்துடனான எங்களின் ஆழமான ஈடுபாட்டை கருத்திற்கொண்டும், மனித உரிமை பேரவையின் ஏனைய பொறிமுறைகளுடன், இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை தொடர்ந்தும் பேணி வரும்.
என குறிப்பிட்டுள்ளார்.