மன்னாரிலிருந்து கொழும்பு சென்ற தனியார் சொகுசு பேருந்தொன்று மதுரங்குளி பகுதியில் விபத்துக்குள்ளாகியது.
குறித்த பேருந்து நேற்று மதியம் மன்னார் பேருந்து தரிப்பிடத்திலிருந்து புறப்பட்டு கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது மதுரங்குளி பகுதியில் பட்டா ரக வாகனம் ஒன்றுக்கு வழிவிடும் போது குறித்த பேருந்து தடம் புரண்டுள்ளது.
விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் எவருக்கும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
மேலும் விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.