மன்னாரில், ஆமை இறைச்சியுடன் இருவர் கைது!

0
101

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு, ஆமை இறைச்சி கொண்டு வந்த இருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று மதியம், சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி கடல் ஆமை இறைச்சியுடன், பள்ளமடு பிரதான வீதியில் வைத்து, மன்னார் குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால், இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதானவர்களிடம் இருந்து, 82 கிலோ கடலாமை இறைச்சி, பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.மீன்களை கொண்டு செல்வது போல், இறைச்சி வாகனத்தில் கொண்டுவரப்பட்ட வேளை, இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மன்னார் குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார், பள்ளமடு வீதியில், குறித்த வாகனத்தை மறித்து சோதனை செய்த போது, இறைச்சி மீட்கப்பட்டதுடன், இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், மேலதிக விசாரணைகளை, மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.