மன்னார் மறைமாவட்ட ஆயர் ஜனாதிபதிக்கு ஆசி வழங்கியமை முறையற்ற விடயம் – மனோஜ் நாணயக்கார

0
84

அதானி நிறுவனத்தின் திட்டத்திற்கு எதிராக மனுத்தாக்கல் செய்து விட்டு பின்னர் ஜனாதிபதியை வரவேற்கும் விடயம் முறையற்றது என மக்களுக்காக நாளை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அதானி நிறுவனத்தின் காற்றாலைத்திட்டத்தை நாட்டிற்கு கொண்டு வரவேண்டும். அதற்கு தடையாக மன்னார் மறைமாவட்ட பேராயர் உள்ளிட்ட தரப்பினர் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இத்தகைய பின்னணியிலேயே ஜனாதிபதி மன்னாருக்கான விஜயத்தை அடிக்கடி மேற்கொள்கின்றார்.

நேற்றைய விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டனையை ஆயர் இல்லத்தில் வைத்து ஆசீர் வாத்தை வழங்கியிருந்தார்.

எதற்காக ஆயர் எழுந்து நின்று ஆசீர்வாதம் வழங்க வேண்டும். அதானி நிறுவனத்தின் திட்டத்திற்கு எதிராக மனுத்தாக்கல் செய்து விட்டு பின்னர் ஜனாதிபதியை வரவேற்று ஏன் இத்தகைய விடயத்தை ஆயர் மேற்கொள்ள வேண்டும்.இந்த விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இது காட்டிக்கொடுக்கும் விடயமாகும்.