மன்னார் மாவட்டத்தில், அரச உத்தியோகத்தர்களுக்கான, 100, 150 மற்றும் 200 மணித்தியால, இரண்டாம் மொழிப் பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கல் மற்றும் கலை நிகழ்வு, இன்று, மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் இடம்பெற்றது.

சிரேஸ்ட மொழிப்பாட வளவாளர் சாகரிகா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக, மன்னார் மாவட்ட உதவி செயலாளர் டில்சன் பயஸ், மன்னார் மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் அருண சந்திரபால மற்றும் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் உதயசந்திரன், சிரேஸ்ர மொழிபாட நெறி வளவாளர் தமிழ் செல்வம், தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உதவியாளர் சிந்துஜா, இரண்டாம் மொழிப்பாட வளவாளர் சுபாஜினி விநாயகமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
2020 ஆம் ஆண்டு, அரச கரும மொழி அமைச்சினால் வெளியிடப்பட்ட 18 இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக, அரச உத்தியோத்தர்களின் மொழி புலமையை விருத்தி செய்யும் முகமாக மேற்கொள்ளப்பட்ட பயிற்சி நெறியை பூர்த்தி செய்த, 2023, 2024 ஆண்டில் பயிற்சியை நிறைவு செய்த பயிலுனர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதன் போது, சிங்கள கற்கை நெறிகளை பூர்த்தி செய்த பயிலுனர்களால், பல்வேறு கலை நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேநேரம், புதிய பிரிவுக்கான சிங்கள பாட நெறியானது, எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பயிற்சி நெறியை தொடர விரும்புவோர், 077 63 55 521 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


